‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி- 2 படம் மூன்று வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் 1000 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள பாகுபலி-2 படத்தை பாராட்டாதவர்களே இல்லை. இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கில்லை.
பொதுவாக மற்றவர்களின் படங்களை பற்றி ட்விட்டரில் கருத்து சொல்லாத ரஜினியே பாகுபலி- 2 படத்தை பாராட்டித்தள்ளினார்கள். ரஜினி மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த அனைவரம் பாகுபலி-2 படத்தை பாராட்டித்தள்ளினார். இந்தப்பட்டியலில் சேராதவர் கமல்ஹாசன் ஒருவர் தான். என்ன காரணத்தினாலோ பாகுபலி-2 படம் பற்றி கமல் வாயைத்திறக்காமலே இருந்தார்.
பாகுபலி-2 படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டனர். ஆனால் கமலுக்கு திரையிட்டு காட்டவில்லை. அதனால்தான் கமல் கருத்து சொல்லவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் பாகுபலி-2 படம் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து வாயைத் திறந்திருக்கிறார் கமல்.
“பாகுபலி-2 படத்தின் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. பாகுபலி-2, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.” என்கிற ரீதியில் பாகுபலி-2 படம் பற்றிய தன்னுடைய கருத்தை தைரியமாக தெரிவித்திருக்கிறார் கமல்.
இதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார்? பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதை உலக மகா படம் என்பதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதோடு, பாகுபலி-2 கதையும் தனக்கு ஏற்புடையதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.