'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி- 2 படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்புதான் தொடக்கம் முதலே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பாகுபலி-2 தமிழ்ப்பதிப்பு உரிமையை வாங்கிய கே புரடக்ஷ்ன்ஸ், தமிழக தியேட்டரிகல் உரிமையை ஆஸ்கார் ரவியிடம் 45 கோடிக்கு விற்றார். அவர் பேசியபடி பணம் தராததினால் அவரிடமிருந்து திரும்ப வாங்கி ஸ்ரீக்ரீன் சரவணனிடம் விற்றார்.
அதை பல விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்பனை செய்த சரவணன், விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை வைத்து தன்னுடைய கடனை அடைத்துவிட்டார். அதனால் தமிழ்நாட்டில் பாகுபலி-2 படம் ரிலீஸ் ஆக முடியாத சூழல் ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டது. ஆனாலும் க்யூப்புக்கு பணம் கட்டாமல் தினம் தினம் பஞ்சாயத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பாகுபலி-2. வளைகுடா நாடுகளில் இப்படத்தின் திரையிடல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணம்? 'பாகுபலி 2' படத்தின் இந்தி தவிர இதர மொழிகளின் வெளிநாட்டு உரிமையை ஒரு நிறுவனத்திற்கு கொடுத்திருந்தார்கள்.
இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பிரச்சினையினால் 2 வாரத்துக்கு மட்டுமே, கேடிஎம் எனப்படும் பட உரிமையை வளைகுடா நாடுகளுக்கு பாகுபலி 2 தயாரிப்பாளர் கொடுத்திருந்தார். அதனை ரத்து செய்துவிட்டதால், வளைகுடா நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பாகுபலி-2 படம் நிறுத்தப்பட்டுள்ளன.