டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி- 2 படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்புதான் தொடக்கம் முதலே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பாகுபலி-2 தமிழ்ப்பதிப்பு உரிமையை வாங்கிய கே புரடக்ஷ்ன்ஸ், தமிழக தியேட்டரிகல் உரிமையை ஆஸ்கார் ரவியிடம் 45 கோடிக்கு விற்றார். அவர் பேசியபடி பணம் தராததினால் அவரிடமிருந்து திரும்ப வாங்கி ஸ்ரீக்ரீன் சரவணனிடம் விற்றார்.
அதை பல விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்பனை செய்த சரவணன், விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை வைத்து தன்னுடைய கடனை அடைத்துவிட்டார். அதனால் தமிழ்நாட்டில் பாகுபலி-2 படம் ரிலீஸ் ஆக முடியாத சூழல் ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டது. ஆனாலும் க்யூப்புக்கு பணம் கட்டாமல் தினம் தினம் பஞ்சாயத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பாகுபலி-2. வளைகுடா நாடுகளில் இப்படத்தின் திரையிடல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணம்? 'பாகுபலி 2' படத்தின் இந்தி தவிர இதர மொழிகளின் வெளிநாட்டு உரிமையை ஒரு நிறுவனத்திற்கு கொடுத்திருந்தார்கள்.
இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பிரச்சினையினால் 2 வாரத்துக்கு மட்டுமே, கேடிஎம் எனப்படும் பட உரிமையை வளைகுடா நாடுகளுக்கு பாகுபலி 2 தயாரிப்பாளர் கொடுத்திருந்தார். அதனை ரத்து செய்துவிட்டதால், வளைகுடா நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பாகுபலி-2 படம் நிறுத்தப்பட்டுள்ளன.