அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரஜினி தற்போது 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதனை தனுஷின் வொண்டர்ஃபார் நிறுவனம் தயாரிக்கிறது. இது மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று செய்தி வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் வருகிற 28ந் தேதி முதல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இயக்குனர் ரஞ்சித் எனது தந்தையின் கதையை சினிமாவாக எடுப்பதாகவும், அதில் நீங்கள் நடிப்பதாகவும் பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டேன். எனது தந்தையை நிழல்உலக தாதா என்றோ, கடத்தல்காரர் என்றோ சித்தரித்து நீங்கள் படம் எடுக்க கூடாது. அவரை எந்த நீதிமன்றமும் குற்றவாளி என்ற சொல்லவில்லை. எனவே அவரை தவறாக சித்தரித்து படம் எடுக்க கூடாது.
அவரை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் என்னிடம வாருங்கள் அவர் கதையை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் நீங்கள் தவறாக சித்தரித்து படம் எடுத்தால் உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும். என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ரஞ்சித் மறுப்பு : இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் கூறியிருப்பதாவது: ஹாஜி மஸ்தான் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர் கதையை நான் ஏன் படமாக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அடுத்து நான் ரஜினியை வைத்து இயக்கப்போவது தாதா கதையே இல்லை. யாரோ கிளப்பி விட்ட வதந்திக்கு யாரோ பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.