பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து, இன்று, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். சினிமா தவிர்த்து நிறைய நலத்திட்ட உதவிகளையும் தனது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இந்நிலையில் தன் அம்மா கண்மணிக்கு லாரன்ஸ் கோயில் கட்டி உள்ளார்.
சென்னை, அம்பத்தூர், ராகவேந்தர் கோயில் அருகே தனது தாயார் கண்மணிக்கு லாரன்ஸ் கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான மே 14 ம் தேதி அன்று காலை 8 மணிக்கு ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைக்கிறார். ஆரம்ப காலத்தில் லாரன்ஸ் கஷ்டப்பட்ட போது ஆதரவு கரம் நீட்டியவர் சூப்பர் சுப்பராயன் என்பதால் அவரை வைத்து சிலையை திறக்கிறார்.
மேலும் இந்த விழாவில் வயது மூத்த ஆயிரம் தாய்மார்களுக்கு சேலையும், ஆறு விவசாய பெண்களுக்கு தாலியை மீட்டு தரும் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த விழாவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரும் போது பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்களை மே 14 ம் தேதியிலிருந்து 48 நாள் முடிந்த மறுநாள் அழைக்க உள்ளார் லாரன்ஸ். அன்று கலையுலத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள எல்லா அன்னையருக்கும் சமர்ப்பிக்க உள்ளார் லாரன்ஸ்.