‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரகாஷ் ராஜின் தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு ரஜினியின் கபாலி படம் மூலம் பேசப்படும் நடிகையானார். அதேசமயம் அதன்பிறகு அவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். தற்போது அக்ஷ்ய் குமாரின் பேடு படத்தில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக சைப் அலிகான் உடன் பாசார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கெளரவ் ஆர் சாவ்லா இயக்க, நிகில் அத்வானி தயாரிக்கிறார்.
இதுப்பற்றி நிகில் அத்வானி கூறியிருப்பதாவது... "பாசார் படத்தில் ராதிகா ஆப்தேவும் இணைந்துள்ளார். இதுவரை ராதிகா ஆப்தே நடித்திராத ஒரு வித்தியாசமான பவர்புல்லான வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படம் நிச்சயம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக, வித்தியாசமான படமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.