ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான 'புலி முருகன்' படத்தை தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் டப்பிங் செய்து கடந்த டிசம்பர் ஆரம்பத்தில் ரிலீஸ் செய்தார்கள். அப்போது 50 நாட்கள் ஓடிய 'மான்யம் புலி' சுமார் 12 கோடி ரூபாயை தெலுங்கில் வசூலித்தது.. இப்போது வரும் மே-19ஆம் தேதி இந்தப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.. அதுவும் 3டியில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்பது கூடுதல் ப்ளஸ்..
இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் ரிலீஸை க்ரீன் ஸ்க்ரீன் பி.கே.நாராயணசாமி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இதுவரை தமிழில் டப்பிங் படங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகையை விட 'புலி முருகன்' படத்திற்கு அதிகமான தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு காரணம் மலையாளம், தெலுங்கில் கூட இல்லாதவகையில் இந்தப்படத்தை 3டியில் மாற்றி தமிழில் ரிலீஸ் செய்வது, மோகன்லாலே இந்தப்படத்திற்கு தமிழில் நேரடியாக டப்பிங் பேசியுள்ளது, குழந்தைகளையும் பெண்களையும் கவரக்கூடிய எந்த மொழிக்கும் பொருந்திப்போகும் கதை என்பது உட்பட கூடுதல் சிறப்பம்சங்கள் இருப்பதால் தான் இதற்கு அதிகம் விலை வைத்தாராம் படத்தின் தயாரிப்பாளர் தோமிச்சன் முளகுபாடம். 'புலி முருகன்' தமிழிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.