நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பீட்சா, ஜிகர்தண்டா என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த கார்த்திக் சுப்பாராஜ், இறைவி படத்தில் சறுக்கினார். இறைவி படம் தயாரிப்பில் இருந்தபோது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷ் அந்தப் படத்தை தானே தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இறைவி வெளியாகி மண்ணைக்கவ்வியது. இறைவி படத்தை வாங்கி தமிழகத்தில் வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த தகவல்கள் எல்லாம் தனுஷ் கவனத்துக்கு வந்ததும், கார்த்திக் சுப்பாராஜை வைத்து படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டார். அதோடு, வடசென்னை, விஐபி 2, எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய படங்களில் தனுஷும் பிஸியாகிவிட்டார். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், தனுஷ் படம் துவங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பதால் வெறுத்துப்போனார் கார்த்திக் சுப்பாராஜ்.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பதாக இருந்தது. தற்போது அவரை நீக்கிவிட்டு, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.