வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த ஏப்-28ல் வெளியான 'பாகுபலி-2'வுக்கு ரசிகர்களிடம் கிடைத்த அற்புதமான வரவேற்பால் தனது சொந்த ஊரில் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அந்தவகையில் கேரளாவில் மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' பட வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது 'பாகுபலி-2'.. மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் கேரளாவில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாகத்தான் இருக்கின்றன..
த்ரிஷ்யம் பட வசூல் சாதனையை (சுமார் 44 கோடி ) அடுத்து மோகன்லாலின் 'புலி முருகன் (சுமார் 9௦ கோடி) தான் முறியடித்தது. தற்போது 'பாகுபலி-2'வும் இந்த இரண்டு வார காலத்திற்குள்ளாகவே 'த்ரிஷ்யம்' சாதனையை மட்டுமல்லாமல் மோகன்லாலின் இன்னொரு படமான 'ஒப்பம்' பட வசூல் சாதனையையும் சேர்த்து (43 கோடி) ஓவர்டேக் செய்துள்ளது. இனிவரும் வார இறுதிக்குள் கேரளாவின் 'பாகுபலி-2' மொத்த வசூல் நிலவரம் சுமார் 5௦ கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.