ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி இயக்குநராக இருந்த கே.எஸ்.ரவிகுமார் கடந்த சில வருடங்களாக பின்னடைவை சந்தித்து வருகிறார். ரஜினியை வைத்து இயக்கிய லிங்கா படத்தின் தோல்வி அவரை சற்று அப்செட்டாக்கிவிட்டது. எனவே நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவர், கடைசியாக இயக்கிய படம் 'முடிஞ்சா இவனப்புடி'.
கன்னட நடிகர் சுதீப் கதாநாயகனாக நடித்த இப்படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டது. அதை தமிழில் டப் செய்து நேரடி படம் போல் வெளியிட்டனர். அப்படியும் முடிஞ்சா இவனப்புடி படம் வெற்றியடையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
இது பாலாகிருஷ்ணா நடிக்கும் 102-வது படம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது! இதற்காக கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.