பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராஜமவுலியின் பாகுபலி சரித்திர படத்தைத் தொடர்ந்து இந்திய அளவில் பல சரித்திர படங்கள் உருவாகின்றன. அந்தவரிசையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நடிக்கும் சங்கமித்ரா படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதைத் தொடர்ந்து 1000 கோடி பட்ஜெட்டில் மோகன்லால் நடிக்கும் மகாபாரதம் தொடங்குகிறது. இந்த படத்தில் பல மொழி நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது ராமாயணம் கதையை ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்போவதாக தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்கிறார்களாம் மேலும், சின்னத்திரையல் ராமாயணம் குறித்து சொல்லப்படாத பல அற்புதங்களை வெள்ளித்திரையில் பிரமாண்டமாக காண்பிக்கப்போகிறார்களாம்.
இந்த ஆண்டு இறுதியில் ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார் அல்லு அரவிந்த். இந்த படத்தில் அவரது மகனான பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அல்லு அர்ஜூன், அனுஷ்கா நடித்த ராணி ருத்ரம்மா தேவியில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.