'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தனது டுவிட்டரில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு, சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு வந்தவர் பாடகி சின்மயி. ஆனால், பாடகி சுசித்ரா ஏற்படுத்திய பரபரப்புவிற்கு பிறகு டுவிட்டரில் கொஞ்சம் அடக்கியே வாசித்து வருகிறார் சின்மயி. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா சென்றிருந்தபோது தன்னிடம் திருடர்கள் கைவரிசை காட்டி விட்டதாக ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் சின்மயி.
அதில், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நகருக்கு ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த எனது கார் சேதமடைந்திருந்தது. காருக்குள் இருந்த பொருட்களும் திருட்டு போயிருந்தது. அதையடுத்து போலீசில் புகார் அளித்தேன். அப்போதுதான் சான்பிரான்சிகோவில் திருட்டு நடப்பது சகஜமான விசயம் என்பது எனக்கு தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.