ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குக்கூ படத்தில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் மாளவிகா நாயர். பார்வையற்ற பெண்ணாக மிக இயல்பாக நடித்திருந்தார். தேசிய விருது வரையிலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. குக்கூ படத்திற்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்ற எதிர்பார்த்தால் படிக்கப்போகிறேன் என்று சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு டில்லிக்கு பறந்துவிட்டார்.
இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற படத்தில் வீரா ஜோடியாக நடிக்கிறார். வீரா பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், ராஜதந்திரம் படங்களில் நடித்தவர். அவினாஷ் ஹரிகரன் இயக்குகிறார், ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மெட்லி புளூஸ் குழுவினர் இசை அமைக்கிறார்கள். மீண்டும் நடிக்க வந்திருப்பது பற்றி மாளவிகா நாயர் கூறியதாவது:
எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்து நல்ல உத்யோகத்தில் இருப்பவர்கள். அதனால் எனக்கும் படிப்பில் ஆர்வம். இதற்கு முன் நான் நடித்த படங்கள் அனைத்துமே பள்ளி விடுமுறை நாட்களில் நடித்த படங்கள்தான். குக்கூ படமும் பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் நடித்துக் கொடுத்தது தான். அடுத்து வந்த பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பு மிகவும் முக்கியமானது அதனால் நடிப்புக்கு இடைவெளி விட்டுவிட்டு படிக்கச் சென்று விட்டேன்.
இப்போது பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கிறேன். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடிக்க வந்திருக்கிறேன். இனி கல்லூரி படிப்புதான் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் கல்லூரிக்கு சென்றால் போதும். அந்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் நடிப்பேன். படிப்பால் நடிப்புக்கும், நடிப்பால் படிப்புக்கும் பாதகம் வராமல் நாட்கள் ஒதுக்கி கொடுத்து நடிப்பேன்.
இத்தனை படங்களில் நடித்து விட வேண்டும். இவ்வளவு காசு சம்பாதித்து விட வேண்டும் என்று எந்த ஆசையும், வேகமும் இல்லை. மனசுக்கு பிடித்த கதையில், கேரக்டரில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் வாங்கினாலே போதும். என்கிறார் மாளவிகா நாயர்.