Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்த சாவித்ரியின் மரணம்

11 மே, 2017 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Shocking-of-Savitris-dead

தற்போது நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கிறார்கள். நான்கு பாகங்களாக எடுக்க கூடிய அளவிற்கு அவரது வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது மரணம் தான் தமிழ் சினிமாவின் மாறாத வடுவாக மாறிவிட்டது.


காலில் தங்க கொலுசு, பிரிமிர் பத்மினி கார், சென்னையில் நான்கு வீடுகள், ஊட்டி, கொடைக்கானலில் பங்களாக்கள் என அவர் மாதிரி அந்தக்காலத்தில் வசதியாக வாழ்ந்த நடிகைகள் யாரும் இல்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலே எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள்.


ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்தார். தன் விருப்பப்படி வாழும் சுதந்திர குணமுடையவர் சாவித்ரி, மனைவி தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறவர் ஜெமினி கணேசன். இந்த வேறுபட்ட குணாதிசயங்கள் அவர்கள் பிரிய காரணமாக இருந்தது. சாவித்ரி சொந்தமாக படம் எடுத்தது ஜெமினிக்கு பிடிக்கவில்லை. தடுத்து பார்த்தார் கேட்கவில்லை. விரிசல் பிரிவுக்கு வழி வகுத்தது.


தன்னை தடுத்த ஜெமினி முன் படங்கள் தயாரித்து ஜெயித்து காட்ட வேண்டும் என்று நினைத்தார் சாவித்ரி. அதுதான் அவருக்கு வினையாகிப்போனது. அவர் தயாரித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை விட்டதை பிடிக்க மீண்டும் மீண்டும் படம் எடுத்தார். வீடுகள் அனைத்தையும் விற்றார். மாட மாளிகையில் வாழ்ந்தவர் அண்ணா நகரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்தார். கவலையை மறக்க மது குடிக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த மது அவரைக் குடித்தது. தினமும் மது அருந்தவில்லை என்றால் அவரால் தூங்கமுடியாது என்ற நிலை.


பணத் தேவைக்காக சிறு சிறு வேடங்களில் நடித்தார். அப்படி ஒரு முறை கன்னடப் படத்தில் நடிக்கச் சென்றபோது பெங்களூரில் உள்ள ஓட்டல் அறையில் மயங்கி விழுந்தார். அன்று விழுந்தவர்தான் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. சென்னையில் சிகிச்சை பெற்ற பின்னர் அண்ணா நகர் வீட்டுக்கு திரும்பினார். மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமானது சுமார் ஒண்ணறை ஆண்டுகள் எந்த உணர்வும் இல்லாமல் கோமாவில் படுத்தார். 1981ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதி மரணம் அடைந்தார். பல வருடங்களுக்கு பிறகு அன்றுதான் அவர் தோற்றத்தை (அருகில் உள்ள படம்) மக்கள் பார்த்தார்கள். எப்பேர்பட்ட பேரழகி, என்ன நடிப்பு, என்ன ஸ்டைல் அப்படிப்பட்டவர் எலும்பும் தோலுமான தோற்றத்தில் இருப்பதை பார்த்து அன்று திரையுலகமே கண்ணீர் விட்டது. கணவன் என்ற முறையில் ஜெமினி கணேசன் அவரது இறுதி சடங்கை நிறைவேற்றினார். சாவித்ரியின் வாழ்க்கை மற்ற நடிகைகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in