இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த மாதம் வெளியான பாகுபலியின் வரலாறு காணாத வெற்றி தமிழ் சினிமாவை ஆட்டம் காணச் செய்து விட்டது. ஒரு வாரத்தில் பரபரப்பு அடங்கிவிடும், அதன்பிறகு வழக்கம்போல் தங்கள் படங்களை வெளியிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை தவிடுபொடியாக்கி இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இன்னும் ஒரு வாரத்துக்கு தியேட்டர்களில் முன்பதிவு பிசியாக இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் பாகுபலி 1500 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்கிறார்கள்.
பாகுபலியால் தியேட்டர் கிடைக்காமல் அப்போது வெளிவருவதாக இருந்த தொண்டன் போன்ற படங்கள் தள்ளிப்போனது. ஒரு வாரத்தில் பாகுபலி ஜுரம் குறைந்த விடும் என்று கருதிய வனமகன், உள்குத்து, மாயவன், நெஞ்சம் மறப்பதில்லை, உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு தேதி 19 மற்றும் 26ந் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது.
ஆனால் அதற்கு இன்னொரு சிக்கல் இருக்கிறது. ஜுன் முதல் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம், திருட்டு விசிடி, இணையதளத்தில் புதிய படங்கள் வெளியீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பிடிப்பு முதல் படம் திரையிடும் தியேட்டர் வரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்திருக்கிறது. இன்று வரை இந்த அறிவிப்பில் மாற்றம் இல்லை. எனவே 26ம் தேதி படம் வெளிவந்தால் அதிலிருந்து 5 நாட்கள்தான் படம் தியேட்டரில் இருக்கும். அதற்பிறகு வேலை நிறுத்ததிற்காக தியேட்டர்கள் மூடப்பட்டு விடும். எனவே 26ம் தேதி படங்கள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் இரண்டு வாரம் ஓடினால் போதும் என்று கருதுகிற படங்கள் மட்டுமே 19ந் தேதி வெளிவரலாம். படங்கள் தயாராகி வெளியீட்டுக்காக 50 படங்களுக்குமேல் காத்திருக்கிறது. பாகுபலியின் தொடர் ஓட்டம், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்த அறிவிப்பால் தமிழ் சினிமா தடுமாற்றத்தில் உள்ளது.