ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேகமாக வளர்ந்து வரும் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. கடந்த ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அங்கு முன்னணி இடத்தை பிடித்தார். தற்போது வாசு, காலேஜ் குமார் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் சம்யுக்தா ஹெக்டேவுக்காகவே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் புதிதாக ஒரு கன்னட படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் சம்யுக்தா. இதன் துவக்க விழாவும், பூஜையும் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வேண்டிய சம்யுக்தா வரவில்லை. விசாரித்து பார்த்ததில் அவர் பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தமிழ் படத்தில் நடிப்பதற்காக சென்னை சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.
கன்னட படத்தை புறக்கணித்துவிட்டு தமிழ் படத்துக்கு சென்று விட்டார் என்று கன்னட ரசிகர்கள் சம்யுக்தாவை கிழித்து தொங்க விட்டார்கள். இதற்கு பதில் அளித்த சம்யுக்தா "கன்னட படங்களை விட எனக்கு என் கேரியர்தான் முக்கியம்" என்று கூறியதாக இணையதளம் ஒன்று அவர் பேட்டியை வெளியிட ரசிகர்கள் இன்னும் கொதித்துப் போய்விட்டார்கள். "சம்யுக்தாவை இனி எந்த கன்னட படத்திற்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாது. அவர் நடித்து வெளிவர இருக்கம் படங்களை புறக்கணிப்போம்" என்று ஆவேசமாக பதிவுகளை வெளியிட்டனர்.
இதனால் பயந்துபோன சம்யுக்தா ஹெக்டே "நான் கர்நாடகத்தைச் சேர்ந்தவள். கன்னட சினிமாதான் எனக்கு முக்கியம். நான் சொல்லாத ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை எனக்கு எதிராக திருப்பி விட்டார்கள். கன்னட ரசிகர்களுக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன். தமிழ் படத்திலிருந்து விலகி விட்டேன்" என்று விளக்கம் அளித்துள்ளார் சம்யுக்தா ஹெக்டே.
இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தரப்பில் விசாரித்தபோது... "புதிய படத்தில் நடிக்க சம்யுக்தா ஹெக்டேவிடம் பேசினோம். அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. நடிப்பதும், நடிக்காததும் அவர் விருப்பம். அதில் நாங்கள் தலையிட மாட்டோம்." என்கிறார்கள்.