ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிருஷ்டி டாங்கே நடித்துள்ள சரவணன் இருக்க பயமேன் படம் நாளை வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு அவர் நடித்து முடித்துள்ள காலக்கூத்து, ஒரு நொடியில், பொட்டு படங்கள் வெளிவருகிறது. இது தவிர சத்ரு படத்தில் நடித்து வருகிறார் இதற்கிடையிடல் சிருஷ்டி நடித்துள்ள மலையாளப் படமான 1971 பியாண்ட் பார்டர் வெற்றி பெற்றிருப்பதால் மலையாள பட வாய்ப்பும் வருகிறது. இதனால் சிருஷ்டி பிசியாக இருக்கிறார்.
"நான் தமிழ் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஒவர் நைட் சக்சஸ் எதையும் சந்திக்கவில்லை. படிப்படியாக வளர்ந்திருக்கிறேன். இடையில் எத்தனையோ சோதனைகள், அவமானங்கள் அனைத்தையும் தாண்டியிருக்கிறேன். எந்த பின்புலமும் இல்லாமல் தன்னந்தனியாக மும்பையில் இருந்து வந்து இங்கு சாதிப்பது சாதாரண விஷயம் இல்லை.
மலையாளத்தில் மோகன்லாலுடன், தமிழில் உதயநிதியுடன் நடிக்கிறேன் என்றால் இந்த இடத்திற்கு வர கடுமையாக உழைத்திருக்கிறேன். இரண்டு, மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டில் நடிப்பதாக சொல்கிறார்கள். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை ஹீரோக்களே இணைந்து நடிக்கும்போது ஹீரோயின்கள் நடிக்க கூடாதா.
டார்லிங், எனக்குள் ஒருவன், முப்பரிமாணம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன். அதையும் விமர்சித்தார்கள். ஆனால் நான் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த படங்கள்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அதனால் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. கதை ஒரு கேரக்டரை எப்படி வடிவமைத்திருக்கிறதோ அப்படியே நடிப்பதுதான் நடிகையின் வேலை. என்கிறார் சிருஷ்டி டாங்கே.