அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு பிராந்திர மொழி படங்களை தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது, நளினி என்ற பெங்காலி - மராத்தி மொழிகள் கலந்த படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம். இப்படம் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அன்னபூர்ணா இடையேயான காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. 1878 ம் ஆண்டுகளில் தாகூர் 17 வயது இளைஞராக மும்பையில் டாக்டர்.அட்மாராம் பதுராங்குடன் வசிப்பது போல் கதை துவங்குகிறது. அட்மாராமின் 20 வயது மகள் அன்னபூர்ணா. இவருக்கும் தாகூருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
தாகூரின் வாழ்க்கை படத்தை பிரியங்கா தயாரிக்க உள்ளதை அவரது தாயார் உறுதிப்படுத்தி உள்ளார். பிரியங்காவின் தாயார் மது சோப்ரா இத குறித்து கூறுகையில், நல்ல கதைகள் ரசிகர்களிடம் போய் சேர வேண்டும் என பிரியங்கா விரும்புகிறார். நளினி படம் உணர்வுப்பூர்வமான அதே சமயம் பொழுதுபோக்கு கதை. இப்படத்தில் நாங்களும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். நளினி படம் இந்தியிலும் டப் செய்யப்பட உள்ளது.