புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் அக்டோபரில்தான் வெளியாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் இப்படத்தின் வெளியீடு ஜுன் 23ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் சில மாற்றங்களைச் செய்ய இயக்குனர் முருகதாஸ் விரும்பியதால், அவற்றை மீண்டும் படமாக்கி வருகிறார்கள். அந்த கிளைமாக்ஸ் காட்சியில் விஷவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகிய பணிகளை செய்து முடிக்க மூன்று மாத காலம் ஆகுமாம்.
'பாகுபலி 2' படம் வெளிவந்த பிறகு இந்தியப் படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் தரத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உயர்த்திவிட்டார் இயக்குனர் ராஜமௌலி. இனி, அப்படி விஷுவல் எஃபெக்ட்சுடன் வரும் படங்கள் 'பாகுபலி 2' தரத்தை விட குறைவாக இருந்தால் ரசிகர்கள் கிண்டலடிக்க வாய்ப்புகள் அதிகம். முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் அதை விரும்பவும் மாட்டார்கள். அதனால்தான் 'ஸ்பைடர்' படத்தின் வெளியீடு அக்டோபரில்தான் இருக்கும் என்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் வெளியீட்டையும் இதே காரணத்திற்காகத்தான் தள்ளி வைத்தார்கள். இப்போது அந்த வரிசையில் 'ஸ்பைடர்' படமும் சேர உள்ளது.
'பாகுபலி 2' படம் பல திறமையான இயக்குனர்களை மேலும் யோசிக்க வைத்துவிட்டது. இனி, தரமற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளை தென்னிந்திய சினிமாவில் பார்க்கவே முடியாது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.