தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி 2 படம் இணையதளங்களில் வெளியானது தொடர்பாக நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனிடம் நேரில் சென்று புகார் அளித்தார். புதுப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் கேட்டிருந்தார்.
தொடர்ந்து மே 30 ம் தேதி முதல் ஒட்டுமொத்த சினிமாத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்கத்தினரும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக நேற்று அறிவித்துள்ளார். புது படங்களில் இணையதளங்களில் வெளியிடுவது தொடர்பாக விஷால் இன்று தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளதார்.
முதல்வரை சந்தித்த பிறகு விஷால் ஸ்டிரைக் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பார் என தெரிகிறது. ஆனால் இணையதளங்களில் வெளியானாலும் பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீசான 9 நாட்களிலேயே ரூ.1000 கோடியை வசூலித்து, இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.
அடுத்த சில நாட்களில் ரூ.2000 கோடி வசூல் செய்த ஒரே இந்திய படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 எட்ட உள்ளது. இதனால் விஷால் அறிவித்துள்ள ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தர தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு முன் பல படங்கள் இணையதளங்களில் வெளியான போது அமைதியாக இருந்த விஷால் இப்போது பாகுபலி 2 க்கு மட்டும் ஸ்டிரைக் அறிவித்திருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.