திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்துதான் அதன்பிறகு முதல்வராக வந்த ஜெயலலிதா கோட்டைக்கு செல்ல வேண்டும். சிவாஜி சிலை அங்கு இருப்பது ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. அதனை அகற்ற பல முயற்சிகளை செய்தார். கண்ணகி சிலையை அகற்றியதைப்போன்று அதனை அகற்ற முடியவில்லை.
இந்த நிலையில் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வாதமாக "அந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது உண்மைதான் விரைவில் அகற்றுகிறோம்" என்று கூறப்பட்டது. இதற்கு பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக சிவாஜி ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். நீதிமன்றம் சிலையை அகற்ற கெடுவிதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிவாஜி மணிமண்டபம் கட்ட 2.80 கோடி அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு அது தற்போது முடியும் தருவாயில் உள்ளது. கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை மணிமண்டபத்தில் வைக்க இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பீடமும் கட்டப்பட்டு விட்டது. அதனால் சிலையை அகற்றி தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசுக்கு பொதுப்பணித்துறையும், ஒப்பந்தக்காரரும் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் சிலை அகற்றப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
"பால்ய பருவத்திலிருந்து நாடகம், 50 ஆண்டுகாலம் திரைவாழ்க்கை, 300 படங்களுக்குமேல் நடிப்பு இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரரான நடிகர் திலகத்திற்கு மக்கள் கூடும் பொது இடத்தில் சிலை வைத்தால் அதற்குதான் எத்தனை எதிர்ப்பு. அந்த சிலை இருக்கும் அதே இடத்தில்தான் சிம்சன் கடிகார கூண்டும், சுதந்திர பொன்விழா நினைவு தூணும் இருக்கிறது. அதனால் பாதிக்கப்படாத போக்குவரத்து சிவாஜி சிலையால்தான் பாதிக்கப்படுகிறதா? சரி அப்படியே போக்குவரத்துக்கு இடையூறு என்றே வைத்துக் கொண்டாலும் கடற்கரை ஒட்டிய சாலை பூங்காவில் வரிசையாக சிலைகள் இருக்கிறதே அதில் ஒரு சிலையாக சிவாஜி சிலையை வைக்க கூடாதா?. மணி மண்டபத்தில் வேறு சிலை வைக்க கூடாதா?. சிவாஜி வாழும்போதும் அவரை யாரும் கொண்டாடவில்லை. இறந்த பிறகும் கொண்டாடவில்லை" என்று வருந்தப்படுகிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.