தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் நேற்று பிரதமர் நரேத்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. இருவரும் நாட்டு நடப்பு குறித்தும், சினிமா குறித்தும் பேசினார். தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுக்கு அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். சந்திப்பின் இறுதியில் தான் தயாரித்து, நடித்து வெளிவர உள்ள டாய்லட் ஏக் பிரேம கதா என்ற படத்தை பார்க்க வருமாறு அக்ஷய் குமார் அழைப்பு விடுத்தார். அதனை பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்ஷய்குமார் "பிரதமரை சந்தித்த டாய்லட் படம் பற்றி பேசினேன். அதை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தேன். படத்தின் டைட்டிலை கேட்டு பிரதமர் வாய்விட்டு சிரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. டாய்லெட் படத்தில் நேரடியாக கருத்தை போதிக்காமல் பிராக்டிகலாவும், காமெடியுடனும் டாய்லட் முக்கியத்துவம் பற்றி படம் பேசுகிறது" என்றார்.
தமிழ் நாட்டில் வெளிவந்த ஜோக்கர் படம் பாணியிலான கதை. திருமணம் செய்து கொள்ள காதலனுக்கு காதலி விதிக்கும் ஒரே நிபந்தனை சொந்தமாக டாய்லட் கட்டித் தரவேண்டும் என்பதுதான். அதனை காதலன் எப்படி நிறைவேற்றுகிறான் என்கிற கதை. ஸ்ரீ நாராயண் சிங் என்பவர் இயக்கி உள்ள இந்தப் படத்தில் அக்ஷய்குமாருடன் பூமி பண்டேகர், அனுபம் கேர், சரன் கான் உள்ளபட பலர் நடித்திருக்கிறார்கள். நீரஞ் பாண்டேவுடன் இணைந்து அக்ஷய்குமார் தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 11ந் தேதி வெளிவருகிறது. படத்திற்கு மத்திய அரசு வரிவிலக்கு வழங்கலாம் என்று தெரிகிறது.