வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சினிமாவோ அல்லது அரசியலோ, பிரபலங்களை விட பிரபலங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் விதி மீறல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதை அடிக்கடி வெளியாகும் செய்திகளின் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. அப்படி ஒரு விதிமீறல் சம்பவத்தில் ட்ராபிக் போலீசிடம் பாலிவுட் நடிகரான சாஹித் கபூரின் மனைவி மிரா ராஜ்புத்தும் சிக்கினார்.
சமீபத்தில் பரபரப்பான ட்ராபிக் மிகுந்த மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த தோழிகளுடன் வந்தார் மிரா ராஜ்புத்.. ஆனால் அவர் அவர் காரை நிறுத்திவிட்டு சென்றது நோ பார்க்கிங் பகுதியில்.. சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, தனது காரின் சக்கரத்தை ட்ராபிக் போலீசார் லாக் செய்திருப்பதை பார்த்தார் மிரா..
அப்போது அங்கே வந்த ட்ராபிக் போலீஸார், விதிகளை மீறி நோ பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தியதற்காக 2௦௦௦ ரூபாய் அபராதம் செலுத்துமாறு அவரிடம் கூறினார். உடனே எந்தவித மறுபேச்சும் இல்லாமல் பைன் தொகையை செலுத்திவிட்டு ரசீது வாங்கிக்கொண்டு அமைதியாக கிளம்பிவிட்டாராம் மிரா. தான் செய்தது தவறு என்பதால் எந்த விவாதமும் செய்யாமல் அபாராதம் செலுத்திவிட்டார். பிரபலங்கள் என்பதால் சிலர் போலீஸிடம் வாக்குவாதம் செய்வார்கள், ஆனால் மிரா அப்படி செய்யாதது போலீஸாரை மட்டுமல்ல அங்கிருப்பவர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது.