ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாநகரம் படத்தில் நம் மனம் கவர்ந்த ஜோடியான 'சந்தீப்-ரெஜினா இருவரும் தற்போது தெலுங்கில் 'நட்சத்திரம்' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணாவின் கணவரே தான். இவர் ரெஜினா குறித்து சமீபத்தில் கூறுகையில், “இந்தப்படத்தில் ரெஜினாவுடன் இணைந்து பணியாற்றிய பொழுது, என் மனைவியின் (ரம்யா கிருஷ்ணனின்) யங்கர் வெர்ஷன் தான் ரெஜினா என்பதை கண்டுகொண்டேன்' என புகழ்ந்துள்ளார்.
இந்தப்படத்தில் ரெஜினா ஒப்பந்தமானதுமே, ரெஜினாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த சிலர், கிருஷ்ண வம்சி தனது பட நாயகிகளை அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வைத்து விடுவாரமே உஷாராக இருந்துக்கோ என பயமுறுத்தினார்களாம்.. ஆனால் இப்போது, “என்ன அப்படிப்பட்ட காட்சியில் நடித்தியா என கேட்டால், அப்படியா ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி ஏதும் தெரியவில்லை.. ஒருவேளை படம் வந்தபின் தான் அப்படிப்பட்ட காட்சிகள் வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும்” கழுவுற மீனில் நழுவுற மீனாக பதிலளித்துள்ளாராம் ரெஜினா.