ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சமீபத்தில் மலையாளத்தில் அமல் நீரத் இயக்கத்தில் வெளியான 'காம்ரேட் இன் அமெரிக்கா' படத்தில் துல்கர் சல்மான் தான் ஹீரோ. ஆனால் இந்தப்படத்தில் நடிக்காவிட்டாலும் கூட, இளம் ஹீரோ பஹத் பாசிலின் பங்கும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது என்கிற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.. ஆம்.. இந்தப்படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகும் சேகுவேரா கதாபாத்திரத்திற்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பது பஹத் பாசில் தான்.
படத்தில் கம்யூனிஸ்ட்டான துல்கர் சல்மான் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் இரவு நேரத்தில் தனது கட்சி அலுவலகத்தில் அப்படியே கண்ணயர்ந்து விடுவார்.. கனவில் கம்யூனிஸ்ட் தலைவர்களான சேகுவேரா, லெனின், காரல் மார்க்ஸ் மூவரும் கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போலவும் அவர்களுடன் துல்கர் யதார்த்தாமாக கிண்டல் செய்தபடி உரையாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த காட்சியில் அவர்கள் மூவரும் சொல்லும் அறிவுரையை துல்கர் ஏற்றுக்கொளும்போது டக்கென கனவு கலைந்துவிடும்..
இந்த காட்சியில் சேகுவேராவாக தோன்றிய இளைஞர் கேரக்டருக்குத்தான் பஹத் பாசில் தனது குரலில் டப்பிங் பேசியிருந்தார்.. இந்தப்படத்திற்கு முன் அமல் நீரத் இயக்கிய 'அயூப்பிண்டே புஸ்தகம்' படத்தில் பஹத் பாசில் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் அவரும் கம்யூனிஸ்ட் ஆகத்தான் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் துல்கர் படத்திற்காக பஹத் பாசில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.