‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'த்ரிஷயம்' படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என அனைவருக்கும் தெரியும். படத்தின் க்ளைமாக்ஸ் வரை பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் விதமாக திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் பார்த்த பல ரசிகர்கள், படம் சூப்பர் ஆனாலும் படத்தின் முதல் பாதியில் தேவையில்லாத குடும்ப காட்சிகளால் படம் நத்தை போல் நகர்வதாகவும், முதல் பாதி நீளம் அதிகம் என்றும் குறைகள் சொன்னார்கள்.. படத்திற்கு அவைதான் பலவீனம் என்றும் கூட சொன்னார்கள்..
தற்போது ஒரு பேட்டியின்போது இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.. அதற்கு அவர், ரசிகர்கள் சொன்ன விஷயங்கள் உண்மைதான் என ஏற்றுக்கொள்வதாக கூறினார். அதேசமயம் அவை குறைகளோ, அல்லது பலவீனங்களோ அல்ல.. அவைதான் பின்னால் நாயகன் குடும்பத்திற்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து அவர்கள் தப்பிக்கவேண்டுமே என ரசிகர்களை படத்துடன் ஒன்றச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என கூறியுள்ளார்..
ஒரு படத்திற்கு இத்தகையை 'தேக்கநிலை' (lag) தேவை என்றால் அதை தயங்காமல் படத்தில் அப்படியே விட்டுவிடவேண்டும்.. மாறாக அதை வேகத்தடையாக நினைத்து நீக்கிவிட கூடது என்றும் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப். மேலும் இந்தியில் வெளியான த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் இதையெல்லாம் குறையென நினைத்து தானோ என்னவோ முதல் பாதியில் நிறைய குடும்ப காட்சிகளை நீக்கிவிட்டார்கள். ஒரிஜினலில் ஒருமணி நேரம் கழித்து வந்த க்ரைம், இந்தியில் அரைமணி நேரத்திலேயே வந்துவிட்டது.. ஆனால் அதன்பின் நாயகன் குடும்பத்திற்கு நிகழும் பிரச்சனைகள் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை.. படமும் பெரிய அளவில் இந்தியில் வரவேற்பு பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.