துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பாகுபலி- 2 படத்தை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒருவர் மட்டும் பாகுபலி பற்றி பேச்சை எடுத்தாலே செம கடுப்பாகிறாராம். அவர் வேறு யாருமல்ல.... பாகுபலி- 2 படத்தில் நடித்துள்ள தமன்னாதான்.
பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியதால் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது தமன்னா செம கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாகுபலி முதல் பாகத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் தமன்னா.
அதனால் தமன்னாவின் கதாப்பாத்திரம் இரண்டாம் பாகத்திலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது. பாகுபலி இரண்டாம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல தமன்னாவுக்கு அதிர்ச்சி. மிக சில ஷாட்களில் தான் தமன்னாவின் முகம் தெரிந்தது. வசனம் கூட இல்லை.
தமன்னா நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியது இயக்குநர் ராஜமௌலி தான் என்பதை படத்தில் பணிபுரிந்தவர்கள் அவரிடமே சொல்லியுள்ளனர். இதற்கிடையில் பாகுபலி-2 வெளியான பிறகு தமன்னாவை பார்ப்பவர்கள் அனைவரும் ஏன் இரண்டாம் பாகத்தில் உங்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர் என்று கேட்டு கேட்டு அவரது டென்ஷனை அதிமாக்கிவிட்டனர்.