Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரசிகர்களை மகிழ்விப்பதே நடிகர்களின் பணி - பரிணிதி சோப்ரா

09 மே, 2017 - 15:02 IST
எழுத்தின் அளவு:
An-Actors-Job-is-to-entertain-the-Audience---Parineeti-Chopra

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. லேடீஸ் வெஸ் ரிக்கி பாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் அக்காவை போன்று பிரபலமாக முடியவில்லை. மூன்றாண்டு இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோயினாக நடித்து, தற்போது வெளியாக தயாராகியுள்ள படம் மேரி பியாரி பிந்து. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் பரிணிதி அளித்த சிறப்பு பேட்டி...


* மேரி பியாரி பிந்து படத்தில் நடிக்க காரணம் என்ன.?


இந்தப்படத்தில் நடிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. முதலாவதாக மேரி பியாரி பிந்து படத்தின் கதை என் மனதை தொட்டது. கதை தவிர்த்து பழைய படங்களின் பாடல்கள் இப்படத்தின் கேரக்டரோடு இடம்பெற்றுள்ளன. இவையெல்லாமும் தான் என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்தது.


* படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?


பிந்து என்ற கேரக்டரில் ஒரு தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளேன். எந்த ஒரு விஷயத்தை முழுமையாக செய்யாத, தன் வாழ்க்கையில் ஒழுக்கமாக இல்லாத பெண் கேரக்டர். அதேசமயம் அவர் தன் உறவினரான அபிமன்யூ எனும் ஆயுஷ்மான் குரானா மீது அலாதி பிரியம் கொண்டவள். தென்னிந்திய பெண் வேடம் என்றாலும் தமிழை விட ஹிந்தி நன்றாக பேசக்கூடியவள்.


* படத்தில் பாட்டு பாடியிருக்கிறீர்கள், அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?


நான் பாடிய பாடல் மிகவும் பிரபலமாகியிருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பாடிய முதல் பாடலுக்கே ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு உணர்வுப்பூர்வமான பாடல், இதுபோன்ற பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும், என் குரலுக்கு இது தான் சரியாக பொருந்தும். வருங்காலங்களில் இதுபோன்ற பாடல்களை பாடுவேன்.


* நடிகர்களே பாடகராகிவிட்டால் பாடகர்களுக்கு பிரச்னை வராதா.?


நடிகராகட்டும், நடிகையாகட்டும், சினிமாவுக்கு வந்துவிட்டால் அவர்கள் ரசிகர்களை எந்த வகையிலாவது மகிழ்விக்க வேண்டும், அது தான் அவர்களது பணி. இதனால் மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என்பது என் கருத்து.


* உங்களது அடுத்தப்படமான கோல்மால் அகைன் பற்றி சொல்லுங்க.?


இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தவாரம் கோவாவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அஜய் மற்றும் ரோகித் உடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கோல்மால் அகைன் படத்தில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக பழகி வருகிறோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நிச்சயம் இந்த குடும்பத்தை பிரிந்த வருத்தம் இருக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in