டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் வேறு துறையில் ஈடுபட வேண்டும் என்ற நாட்டம் வருவது இயல்புதான். அதில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ.. சும்மா முயற்சித்து பார்ப்போம் என்று இறங்குவார்கள். கடந்த 25 வருடங்களாக திரை இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்த ஏ.ஆர்.ரஹ்மான், உச்சகட்டமாக ஆஸ்கர் விருதும் பெற்றார்.
இதற்கு மேல் இசையில் சாதிக்க ஏதுமில்லை என்று நினைத்தாரோ என்னவோ இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்டார். தற்போது அவர் இயக்கி வரும் படம் லீ மஸ்க். இந்த படத்தில் வெளிநாட்டு கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரோம் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் Virtual Reality Technology என்ற நவீன தொழில்நுட்பமுறையில் இசை மற்றும் அழகியல் நிறைந்த காட்சி அமைப்புகளுடன் உருவாகி வருகிறது.
லீ மஸ்க் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது அடுத்த படத்தை VR movie based என்ற முறையில் இந்திய நடனம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.