பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதனால் தயவுசெய்து விவசாயிகள் முதுகெலும்பு இல்லாமல் நடிகர்கள் பின்னாடி நிற்க வேண்டிய அவசியமில்லை. விவசாயத்தை காக்க வேண்டுமென்றால் விவசாயிகள் தன்மானத்தோடு நிற்க வேண்டும் என்கிறார் நடிகர் ஆரி.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, தமிழ்நாட்டு விவசாயிகள் டில்லியில் 41 நாட்களுக்கு மேலாக போராடியும் விவசாய கடன் தள்ளுபடி ஆகவில்லை. விவசாயிகளுக்கு மிஞ்சியிருப்பது கோவணம் மட்டும்தான். டில்லிக்கு போராட போன இடத்தில் அவர்களது கோவணத்தையும் அவிழ்த்து விட்டுவிட்டனர். இது ரொம்ப வருத்தமான விசயம்.
லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு நாம் என்ன உதவி செய்யப்போகிறோம் என்கிற ஒரு கேள்வி உள்ளது. இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும். விவசாயியை காப்பாத்துவதா? விவசாயத்தை காப்பாத்துவதா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தூண்டில் போட கற்றுக்கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைத்தரத்தை அவர்களே உயர்த்திக்கொள்ளும் நிலைக்கு நாம் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதனால் தயவுசெய்து விவசாயிகள் முதுகெலும்பு இல்லாமல் நடிகர்கள் பின்னாடி நிற்க வேண்டிய அவசியமில்லை. விவசாயத்தை காக்க வேணடுமென்றால் விவசாயிகள் தன்மானத்தோடு நிற்க வேண்டும். கடவுளுக்கு அப்புறம் இங்கே எல்லாமே விவசாயிதான். அதையடுத்து தண்ணீர் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தங்கத்தில் பணத்தைப்போட்ட அனைவரும் இப்போது தண்ணீரில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தண்ணீரை வியாபாரம் பண்ண அனைவருமே தயாராகி விட்டனர். கோக், பெப்சி தயாரிப்பாளர்கள் நம்ம ஊருக்கு வந்து நம்ம தண்ணிய எடுத்து நம்மகிட்டயே விற்க்கிறாங்க. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மட்டும் ஆயிரத்திற்கு மேல் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், விவசாயத்தை தடுத்து விட்டால் அவர்களே உணவு விற்கலாம். அந்த உணவை சாப்பிட்டால் நமக்கு கண்ட நோய்கள் வரும். அதன்பிறகு அதற்கு அவர்களே மருந்து தருவார்கள். ஆக, இந்தியாவில் உணவு அரசியல், மருத்துவ அரசியல் நடக்கிறது.
இதேமாதிரி எல்லா நாடுகளிலும் பிரச்சினை உள்ளது. இன்றைக்கு நம்ம ஊரில் பத்து ரூபாய்க்கு தண்ணீர் கொடுப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இதுவே 100 முதல் 150 ரூபாய்க்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது ரொம்ப முக்கியமாக உள்ளது. அதுதான் முக்கியமான தீர்வாகும். விவசாயத்தை காப்பதுதான் நமது முக்கியமான கடமையாக இருக்கிறது. மொத்த விவசாயிகளையும் காப்பாற்றுவதற்கான வழி கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்கிறார் ஆரி.