Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாக்காரர்கள் பின்னாடி விவசாயிகள் நிற்க வேண்டிய அவசியமில்லை - ஆரி

09 மே, 2017 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Aari-spoke-about-Farmers-at-Grahanam-Audio-Launch

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதனால் தயவுசெய்து விவசாயிகள் முதுகெலும்பு இல்லாமல் நடிகர்கள் பின்னாடி நிற்க வேண்டிய அவசியமில்லை. விவசாயத்தை காக்க வேண்டுமென்றால் விவசாயிகள் தன்மானத்தோடு நிற்க வேண்டும் என்கிறார் நடிகர் ஆரி.


இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, தமிழ்நாட்டு விவசாயிகள் டில்லியில் 41 நாட்களுக்கு மேலாக போராடியும் விவசாய கடன் தள்ளுபடி ஆகவில்லை. விவசாயிகளுக்கு மிஞ்சியிருப்பது கோவணம் மட்டும்தான். டில்லிக்கு போராட போன இடத்தில் அவர்களது கோவணத்தையும் அவிழ்த்து விட்டுவிட்டனர். இது ரொம்ப வருத்தமான விசயம்.


லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு நாம் என்ன உதவி செய்யப்போகிறோம் என்கிற ஒரு கேள்வி உள்ளது. இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும். விவசாயியை காப்பாத்துவதா? விவசாயத்தை காப்பாத்துவதா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தூண்டில் போட கற்றுக்கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைத்தரத்தை அவர்களே உயர்த்திக்கொள்ளும் நிலைக்கு நாம் கொண்டு வர வேண்டும்.


இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதனால் தயவுசெய்து விவசாயிகள் முதுகெலும்பு இல்லாமல் நடிகர்கள் பின்னாடி நிற்க வேண்டிய அவசியமில்லை. விவசாயத்தை காக்க வேணடுமென்றால் விவசாயிகள் தன்மானத்தோடு நிற்க வேண்டும். கடவுளுக்கு அப்புறம் இங்கே எல்லாமே விவசாயிதான். அதையடுத்து தண்ணீர் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தங்கத்தில் பணத்தைப்போட்ட அனைவரும் இப்போது தண்ணீரில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


தண்ணீரை வியாபாரம் பண்ண அனைவருமே தயாராகி விட்டனர். கோக், பெப்சி தயாரிப்பாளர்கள் நம்ம ஊருக்கு வந்து நம்ம தண்ணிய எடுத்து நம்மகிட்டயே விற்க்கிறாங்க. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மட்டும் ஆயிரத்திற்கு மேல் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், விவசாயத்தை தடுத்து விட்டால் அவர்களே உணவு விற்கலாம். அந்த உணவை சாப்பிட்டால் நமக்கு கண்ட நோய்கள் வரும். அதன்பிறகு அதற்கு அவர்களே மருந்து தருவார்கள். ஆக, இந்தியாவில் உணவு அரசியல், மருத்துவ அரசியல் நடக்கிறது.


இதேமாதிரி எல்லா நாடுகளிலும் பிரச்சினை உள்ளது. இன்றைக்கு நம்ம ஊரில் பத்து ரூபாய்க்கு தண்ணீர் கொடுப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இதுவே 100 முதல் 150 ரூபாய்க்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது ரொம்ப முக்கியமாக உள்ளது. அதுதான் முக்கியமான தீர்வாகும். விவசாயத்தை காப்பதுதான் நமது முக்கியமான கடமையாக இருக்கிறது. மொத்த விவசாயிகளையும் காப்பாற்றுவதற்கான வழி கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்கிறார் ஆரி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in