Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவியின் நகையை விற்றுத்தான் சென்னைக்கு பாட வந்தேன் - தேசிய விருது பாடகர் சுந்தரய்யர்

09 மே, 2017 - 11:57 IST
எழுத்தின் அளவு:
I-sold-my-wifes-jewel-says-joker-sundarayyar

குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன், அதன்பிறகு இயக்கிய படம் ஜோக்கர். குருசோமசுந்தரம் நாயகனாக நடித்த அந்த படத்தில் என்னங்க சார் உங்க சட்டம், ஜாஸ்மின் ஆகிய இரண்டு பாடல்களை பாடியவர் தர்மபுரியைச் சேர்ந்த பாடகர் சுந்தரய்யர். சினிமாவில் பாடிய முதல் பாட்டுக்கே தேசிய விருது பெற்ற அவர் அந்த நொடிகளில் இருந்து இன்னும் தான் வானத்தில் பறந்து கொண்டேயிருப்பதாக சொல்கிறார்.


அவர் மேலும் கூறுகையில், நானெல்லாம் சினிமாவில் பாடுவேன், தேசிய விருது வாங்குவேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. கிராமப்புறங்களில் தெருக்களில் பாடி வந்த தெருப்பாடகன் நான். மைக் கூட இல்லாமல் கத்தி பாடுவேன். என் ஊரில் இருப்பவர்களுக்கு என்னை பிடிக்காது. அதனால் ஊரை விட்டு வெளியே வந்து குடிசை வீடு கட்டி வாழ்ந்து வந்தேன்.


ஜோக்கர் படத்திற்கான லொகேசன் பார்க்க தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, டைரக்டர் ராஜூமுருகன் உள்ளிட்டோர் தர்மபுரிக்கு வந்திருந்தனர். அப்போது வித்தியாசமான குரல் வளம் கொண்ட அந்த ஏரியா பாடகர்களை தேடுவதாக கேள்விப்பட்டு அவர்களை சென்று பார்த்தேன். என் குரலையும் பதிவு செய்து கொண்டார்கள். அதையடுத்து சென்னை வந்தவர்கள் ஒருநாள் என்னை அழைத்தனர். அப்போது சென்னைக்கு செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் என் மனைவியின் காதுகளில் இருந்த தோடை விற்று அந்த பணத்தில் சென்னை வந்து பாடினேன். முதன்முதலாக ரெக்கார்டிங் தியேட்டர், வட்டமான மைக்கைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.


எனக்கு ரெக்கார்டிங் தியேட்டர்களில் பாடிய அனுபவம் இல்லாததால் என்னை கஷ்டப்பட்டு பாட வைத்தார் இசையமைப்பாளர். ஜோக்கர் படத்தில் இடம் பெற்ற ஜாஸ்மின் என்ற பாடலைத்தான் முதலில் பாடினேன். அதன்பிறகு என்னங்க சார் உங்க சட்டம் -என்ற பாடல். இதில் ஜாஸ்மின் பாடல் பாடியதற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. நானெல்லாம் படத்தில் பாடியதே பெரிய விசயம். ஆனால் பாடிய முதல் பாட்டுக்கே தேசிய விருதே கிடைத்து விட்டது. அதோடு அந்த பாடலை விருது வாங்க சென்றபோது ஜனாதிபதி முன்பும் பாடினேன். நான் கனவில்கூட நினைத்து பார்க்காத விசயங்கள் நடந்துள்ளது. விருது வாங்குவதற்காக முதன்முதலாக விமானத்தில் பறந்து சென்ற நான், இன்னும் அதிலிருந்து இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே தான் இருக்கிறேன் என்கிறார் பாடகர் சுந்தரய்யர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in