தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏப்ரல் 28-ந் தேதி வெளியான பாகுபலி-2, வெளியாகி பத்து நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் சாதனை புரிந்து இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படம் வெளியானதும் ரஜினி உள்பட பல இந்திய சினிமா பிரபலங்கள் பாகுபலி-2 படத்தை பாராட்டினர். அதோடு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இப்படம் பத்து நாட்களில் 1000 கோடி வசூலை தொட்ட நிலையில், இன்னும் தொடர்ந்து வசூலித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பாகுபலி-2 வெளியானபோது, இந்த படத்தை யாராவது இன்டர்நெட்டில் பார்த்தால் அவர்களைப்பார்த்து கம்ப்யூட்டரே காறித்துப்பும் எனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. அதையடுத்து தற்போது பாகுபலி-2 குறித்து அவர் டுவிட்டரில் இன்னொரு பதிவும் செய்திருக்கிறார்.
அதில், நான் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் ஆங்கிலப் படங்களைப் பார்ப்பேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி பிரமாண்டத்தில் நம்ம ஊர் படங்களும் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் எனது அந்த ஏக்கத்தை பாகுபலி-2 தீர்த்து விட்டது. இந்தியாவில் என்ன செய்ய முடியுமோ...?, அதை கச்சிதமாக செய்திருக்கிறார் ராஜமெளலி. ஆங்கிலப்படங்களுக்கு இணையாக இந்திய படங்களையும் எடுக்க முடியும் என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம். நம்மாளும் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது, இதற்காக ராஜமெளலிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.