ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிபிராஜ், நிகிலா விமல் நடிக்கும் படம் ரங்கா. வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்தது. அங்கு பல சிரமங்களுக்கு இடையே படப்பிடிப்பை முடித்து விட்டுத் திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா கூறியதாவது:
இயக்குனர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னை கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் எங்களை அச்சுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும், காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை என தோன்றவே, உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம்.
ஒரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த இதை செய்வது தான் நல்லது என எனக்கு தோன்றியது. முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் எல்லாம் படமாக்கி விட்டோம். உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. நாங்கள் சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தக் படப்பிடிப்பை முடித்தோம். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சிபிராஜும், நிகிலாவும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார்கள். சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயனும், அவருடைய குழுவினரும் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் . படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து விட்டோம், இங்கு அடிக்கும் வெயில் மிக கொடுமையாக இருக்கிறது. என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.