'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ள முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை தமிழ், தெலுங்கில் தயாரான 'பாகுபலி 2' படம் புரிந்துள்ளது. படம் வெளியான பத்து நாட்களுக்குள்ளாகவே அப்படிப்பட்ட சாதனையைப் புரிந்தது படக் குழுவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரசாத் தேவினேனி இது பற்றி கூறுகையில், “1000 கோடி வசூலிக்க வேண்டும் என்பதுதான் எங்களது டார்கெட்டாக இருந்தது. ஆனால், அதை பத்து நாட்களுக்குள் படம் வசூலித்தது பெரும் ஆச்சரியமாக உள்ளது. படக் குழுவினர் பலர் வெளிநாட்டில் உள்ளார்கள். அவர்கள் திரும்பி வந்ததும் மிகப் பெரும் வெற்றி விழா ஒன்றை நடத்த உள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
படம் தமிழ், தெலுங்கில் தயாரானதாகச் சொல்லப்பட்டாலும், தெலுங்குத் திரையுலகினர் இந்த வசூல் சாதனையை தெலுங்குத் திரையுலகின் சாதனையாகவே கருதுகிறார்கள். தெலுங்கு திரையுலகத்தைச் சார்ந்த பலரும் படம் 1000 கோடி வசூலித்ததைப் பாராட்டி வருகிறார்கள். வெற்றி விழா நடைபெறும் போது மொத்த தெலுங்குத் திரையுலகத்தினரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நேற்றுடன் இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வாரத்திற்குள் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் 100 கோடியைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த 300 கோடி ரூபாய் வசூல் எதிர்பாராத ஒரு வசூல் தொகை என்கிறார்கள். இப்படி பல இடங்களில் எதிர்பார்ப்புகளை மீறி 'பாகுபலி 2' படம் தன்னுடைய வசூலை இன்றும் தொடர்கிறது.