பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி விட்டன. இரண்டாவது பாகம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலித்து, அடுத்த சாதனையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சரித்திரப் படம் வசூலில் சரித்திர சாதனை புரிந்து கொண்டிருப்பது ரசிகர்களையும் கூட ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு 'பாகுபலி 3' படம் வருமா என படத்தைப் பார்த்த பின் ரசிகர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால், 'பாகுபலி 2' படத் தலைப்பிலேயே 'முடிவு' என்ற இணை தலைப்பையும் வைத்துள்ளதால் மூன்றாம் பாகம் என்ற பேச்சுக்கும் இடமில்லை தான். இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் திரைப்படக் கல்லூரியில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, தன்னுடைய அப்பா விஜயேந்திர பிரசாத், சுவாரசியமான கதையைக் கொடுத்தால் மூன்றாம் பாகம் வர வாய்ப்புள்ளது என்றார்.
ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் கதை எழுதிய, இயக்குனர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், மூன்றாம் பாகம் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.
“இரண்டு பாகங்களிலும் 'பாகுபலி' படத்தின் கதையை முடித்துவிட்டோம். மூன்றாம் பாகம் வர வாய்ப்பில்லை. ஆனாலும், டிவி தொடர்கள், காமிக்ஸ் தொடர்கள் வடிவில் 'பாகுபலி' இருக்கும்,” எனக் கூறியிருக்கிறார்.
'பாகுபலி' கதாபாத்திரத்திற்கு குழந்தைகள், பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அந்தக் கதாபாத்திரத்தை வைத்து எதிர்காலத்தில் பல விதமான கதைகள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.