தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரையுலகத்தை பொறுத்தவரை தற்போது உள்ள கதாநாயகர்களில் யார் முன்னணி நடிகர் என மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண் ரசிகர்களுக்குள் கடும் போட்டி நிலவுவதை சோஷியல் மீடியாவில் நன்கு பார்க்க முடிகிறது.. அப்படியானால் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்குள்ளும் ஈகோ இருக்கும் தானே என்று நினைத்தால், அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என சமீபத்திய தனது செயலால் அதை உடைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.
விஷயம் இதுதான்... ஜூனியர் என்.டி.ஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஜனதா கேரேஜ்' படத்தை இயக்கியவர் இயக்குனர் கொரட்டால சிவா. இவர் தனது அடுத்த படத்தை மகேஷ்பாபுவை வைத்து இயக்கவுள்ளார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அவரது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக கிளம்பியவர், தனது நண்பரான கொரட்டால சிவாவும் திருப்பதிக்கு கிளம்பிக்கொண்டு இருப்பதை அறிந்து அவரையும் தன்னுடன் பயணத்தில் இணைத்துக் கொண்டார்.
ஆனால் கொரட்டால சிவா, திருப்பதிக்கு கிளம்பிய காரணமோ தனது அடுத்த படமான மகேஷ்பாபு பட ஸ்க்ரிப்ட்டை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபட வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு படம் துவங்கும் முன்பும் அவர் இப்படி செய்வது வழக்கம். இந்த விஷயம் தெரிந்த ஜூனியர் என்.டி.ஆர் மகேஷ்பாபு பட ஸ்கிரிப்ட்டை வைத்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்ததுடன் தானும் அதில் கலந்து கொண்டு அந்தப்படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டாராம்.