'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. பாலிவுட் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலமானவர் தான். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை சோகமானது. திருமண உறவு நீடிக்காமல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், பின்னர் அதிலிருந்து மீண்டார். இப்போது எல்லாம் பிரச்னைகளையும் கடந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது அவர் டியர் மாயா என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே மனீஷா, இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார்.
இதுகுறித்து மனீஷா கூறியிருப்பதாவது... "இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தாய் ஆகலாம் என்று எண்ணியுள்ளேன். அதற்காக சட்ட ரீதியான பணிகளை துவக்கியுள்ளேன். இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2018-ல் குழந்தைகளை தத்தெடுத்து விடுவேன்" என்று கூறியுள்ளார்.