ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய தலைமுறையினர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்படிப் படித்திருந்தார்கள் என்றால் பாகுபலி 2 படத்திற்கான ரெபரென்ஸ் எங்கிருந்து அதிகம் வந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். பாகுபலி 2 படத்தின் கதாபாத்திர அமைப்புகளில் பொன்னியின் செல்வன் தழுவலும், கல்கியின் வியக்க வைக்கும் வர்ணனைகளை விஷுவல் எஃபெக்டாக காட்சிப்படுத்தியிருப்பதும், பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கும்.
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு டிவி தொடராகவாவது வருமா அல்லது, திரைப்படமாக எப்போது வரும் என அந்த நாவலைப் படிப்பவர்கள் அதை விஷுவலாகவும் பார்க்க இத்தனை ஆண்டு காலமாக எதிர்நோக்கியுள்ளார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகில் உள்ள எந்த ஒரு இயக்குனருக்கும் அந்த நாவலை திரைப்படமாக ஆக்கும் யோசனை இருக்கிறதா என்று தெரியவில்லை.
எம்ஜிஆர் காலத்திலிருந்து மணிரத்னம் காலம் வரையிலும் அவ்வப்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்ததோடு சரி. டிவி தொடராக ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன் பின் கைவிடப்பட்ட கதைகளும் உண்டு. கடந்த சில வருடங்களாக அதை அனிமேஷன் சீரிஸ் ஆக தனியார் நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழில்தான் பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்கள் அதிகமாக இருக்கின்றன. தமிழக மக்களின் மனம் கவர்ந்த இப்படிப்பட்ட நாவல்கள் வரும் காலங்களிலாவது திரைப்படமாகுமா என அந்த நாவல்களைப் படித்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.