விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாகுபலி-2' படம் ரிலீஸ் ரிலீஸ் ஆவதற்கு முன் அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தீயாய் வேலை செய்தார் நடிகர் பிரபாஸ். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வி.ஐ.பிகளுக்கான சிறக்குப்பு காட்சிகள், வெவ்வேறு இடங்களில் நடைபெறும் படத்தின் சக்சஸ் பார்ட்டிகள் என பிரபாஸுக்கு முன்னைவிட அழைப்புகள் பிஸியாக வந்த வண்ணம் இருக்கின்றன.. ஆனால் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பாகுபலி படத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிரபாஸ் தனது அடுத்த படமான 'சாஹூ' படம் துவங்கும் வரை அமெரிக்காவில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளரும் இந்தியில் 'பாகுபலி-2'வை வெளியிட்டு நல்ல வரவேற்பு பெற உதவியருமான கரண் ஜோஹர் இந்தப்படத்தின் வெற்றியை கொண்டாட சக்சஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து பிரபாஸுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தான் ஓய்வுக்காக வெளிநாடு செல்வதை காரணம் காட்டி இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள முடியாது என கூறிவிட்டாராம் பிரபாஸ். சரி பிரபாஸ் திரும்பி வந்தபின் பார்ட்டியை வைத்துக்கொள்ளலாம் என கரண் ஜோஹர் சொன்னதற்கு கூட, எனக்காக காத்திருக்க வேண்டாம் என நாசூக்காக சொல்லிவிட்டாராம் பிரபாஸ். இதே காரணத்திற்காகத்தான் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் சோபு, அனுஷ்கா ஆகியோர் கலந்துகொண்டும் கூட பிரபாஸ் அதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.