டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விளையாட்டு பின்னணியில் சரியானபடி கதை சொன்னால் படம் சக்சஸ் என்பதற்கு பல முன் உதாரணங்கள் மலையாள சினிமாவில் உண்டு. அந்தவகையில் கேரளாவின் மறைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் தான் 'கேப்டன்.. இதில் கேப்டன் ஆக நடிக்கிறார் நடிகர் ஜெயசூர்யா. இந்தப்படத்தின் இயக்குனர் பிரஜேஷ் சென் இந்த கதையை எழுதும்போதே 'சத்யன்' கதாபாத்திரமாக மனதில் வந்து உட்கார்ந்து கொண்டவர் நடிகர் ஜெயசூர்யாதானாம்.
இதுவரை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இதுதானாம். கடந்த சில நாட்களாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை கோழிக்கோடு யுனிவர்சிட்டியில் படமாக்கி வந்தார்கள். அங்கே உள்ள விளையாட்டு அரங்கில் கால்பந்து சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது எதிர்பாராதவிதமாக ஜெயசூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவரை பரிசோத்தித்த டாக்டர்கள், அவர் ஒரு வாரம் ஒய்வு எடுக்க வேண்டும் என கூறிவிட்டதால், தற்போது தற்காலிகமாக 'கேப்டன்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.