'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான பாகுபலி இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்தது. படம் வெளிவந்த மறுநாளே இணையதளத்தில் தியேட்டரில் பதிவு செய்யப்பட்ட பிரிண்ட் இணையளத்தில் வெளியானது. ஆனால் பிரமாண்ட செட்டுகள் போட்டு எடுக்கப்பட்ட படம் என்பதாலும் மக்கள் தியேட்டரில் பார்க்கவே ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதாலும் படத் தயாரிப்பாளர் அதுபற்றி பெரிதாக கவலைப்படவில்லை.
இந்த நிலையில் பாகுபலி 2 திரைப்படம் நேற்று எச்டி தொழில்நுட்ப தரத்தில் இணையதளத்தில் வெளியானது. பெண்டிரைவில் காப்பி பண்ணி ஹோம் தியேட்டர் புரொஜக்டர் மூலம் தியேட்டர் எபெக்டுடன் பார்க்கலாம். அப்படி பார்ப்பது நமது நாட்டில் மிக மிக குறைவு என்றாலும் வெளிநாட்டில் சர்வசாதாரணம். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் தமிழ் இணையதள பக்கத்தில் வெளியாகி இருப்பதால் பாகுபலி தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.
இதனால் நேற்று காலை விஷால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பாகுபலி திரைப்படம் வெளியாகியிருக்கும் இணைதள விலாசங்களை கொடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் "இதுபோன்ற பிரமாண்ட படங்கள் இணையதளத்தில் வெளியாகும்போது அதன் தயாரிப்பாளருக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னை தற்போது பெரிதாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் இதுகுறித்து விரிவாக பேசுகிறேன்" என்றார்.