துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி 2 படம் உலக அளவில் 9 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் சற்று முன்னர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான இப் படம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 9000 தியேட்டர்களில் இப்படம் வெளியானது.
முதல் நாளில் இருந்தே வசூலும் வரவேற்பும் இரண்டாவது வாரம் வரையிலும் நீடித்து வந்தது. இந்திய அளவில் ஒவ்வொரு நாளுமே புதுப்புது சாதனைகளைப் படைத்தது.
இந்தியாவில் மட்டும் ஹிந்திப் படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியது. ஒரு நேரடி ஹிந்திப் படத்திற்குக் கிடைக்கும் வசூல் இந்தப் படத்திற்குக் கிடைத்தது பாலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 100 கோடியையும், தமிழ்நாட்டில் 100 கோடியையும் விரைவில் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் 200 கோடியை விரைவில் கடக்கும் என்கிறார்கள். மும்பை ஏரியாவில் மட்டும் நேற்றுடன் 100 கோடியைக் கடந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5 வருட உழைப்பில் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. முதல் பாகத்தின் வசூல் 700 கோடியைத் தொட்ட நிலையில், இரண்டாம் பாகம் 1000 கோடியைத் தாண்டியுள்ளது. இரண்டாம் பாகத் மேலும் 500 கோடியையும் அதற்கு மேலும் தாண்ட வாய்ப்புள்ளது. இரண்டு பாகங்களையும் சேர்த்தால் 2000 கோடி ரூபாய் வசூலை பாகுபலி பெறும் வாய்ப்புகள் அதிகம்.
பாகுபலி படம் இந்தியத் திரையுலகில் தனிப்பட்ட பெருமையைப் படைத்துள்ள நிலையில், பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. இனி, இந்தியாவிலிருந்து வியக்க வைக்கும் பல படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.