இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிமர் சேனலில் செய்தி வாசித்து வருபவர் ரஞ்சித். யாராக இருந்தாலும் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புகளை முழுமையாக தெரிந்து கொண்டு செய்தி வாசிக்க வேண்டும். அது இல்லாமல் தமிழை கொலை செய்வது போன்று வாசிப்ப தைக் கேட்டால் எனக்கு கோபம் வந்து விடும் என்கிறார் அவர். தினமலர் இணையதளத்திற்காக ரஞ்சித் அளித்த பேட்டி...
இன்றைக்கு செய்தி வாசிப்பவர்கள் நிறைய பேருக்கு முக்கியமானவர்களின் பெயர்கள் தெரிவதில்லை. அதேபோல், பிரதமர் மோடியா இல்லை மோதியா என இதுவரைக்கும் தெரியவில்லை. ராஜபக்சேவின் பெயர் ராஜபக்ச என்பதுதான் ஆனால் குறிலில் முடிவதை நாம் நெடிலில் சொல்கிறோம். ஆங்கில வார்த்தை களை நேட்டிவிட்டியில்தான் படிக்க வேண்டும். அதனால் பெயர்களை தனிப்பட்ட முறையில் சரியாக தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதுபோன்ற விச யங்களை நான் கூகுளில் போய் சர்ச் பண்ணி உச்சரிப்புகளை தெரிந்து கொள்வேன்.
மேலும், பாட்டியாலா நீதிமன்றம் என்றதான் நாம் சொல்கிறோம். ஆனால் அது பட்டியாலா நீதிமன்றம்தான். மேனகா காந்தியின் உண்மையான பெயர் மனேகா காந்தி. இப்போது நாம் அப்படி சொன்னால் நாம் தப்பாக படிப்பதாக திட்டுவார் கள். ஒவ்வொரு பெயர்களையும் நாம் மாற்றித்தான் சொல்கிறோம். ஈராக் என்பது ர்ராக்தான். நாம் குறிலை நெடிலாக சொல்கிறோம். அவங்க நேடிட்டிவிட்டியில் தான் நாம் சொல்ல வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் என்பதை நான் ஒரு லீட் டர் பெட்ரோல் என்பேன். அதுதான் உண்மையானது. அப்படித்தான் சொல்ல வேண்டும். கூகுளில் இதை சர்ச் பண்ணப்பார்த்தால் லீட்டர் என்றுதான் இருக்கும்.
அதனால் இதன்பிறகு செய்தி வாசிக்க வருபவர்கள் கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொள்ளட்டுமே என்று நான் சென்னையில், ரம்யா நியூஸ் ரீடிங் அகாடமி திறந்திருக்கிறேன். இதில் பயிற்சி பெற வருபவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுக்கிறேன். என்னிடம் செய்தி வாசிக்க பயிற்சி பெறுபவர்கள் சேனல்களுக்கு வரும்போது அவர்களது வாசிப்பு வித்தியாசமாக இருக்கும். அவர்களுக்கு பயிற்சி கொடுத்த எனக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
மேலும், சில செய்தி வாசிப்பாளர்கள் தமிழை கொலை பண்ணுவார்கள். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது. ல, ழ, ன, ண என உச்சரிப்புகளை தவறாக செய்வார்கள். ஒவ்வொரு எழுத்திற்கும் வித்தியாசம் உள்ளது. சிலர் அது தெரியாமலேயே வாசிக்கிறார்கள். இதைக்கேட்டால் எனக்கு கோபம் வரும். இந்த மாதிரி செய்தி வாசிப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. தமிழ் எழுத்து, வார்த்தை களை தெளிவாக தெரிந்து கொண்டு வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அகாடமி தொடங்கியுள்ளேன். இது எனக்கு ரொம்ப வருட கனவு. அடுத்துவரும் செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரி தவறை செய்யக்கூடாது என்பது எனது ஆசையாக உள்ளது.
தமிழுக்கு இருக்கிற ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரு துணைகால் எழுத்தை மாற்றிப் போட்டாலே அர்த்தமே மாறி விடும். அதனால் வார்த்தைகளை கவனமாக படிக்க வேண்டும். அதோடு, சமீபகாலமாக மியூசிக் சேனல் பார்த்தவர்கள்கூட நியூஸ் சேனல் பக்கம் திரும்பியுள்ளனர். டிஆர்பி நியூஸ் சேனல்களுக்குத்தான் அதிகமாக உள்ளது. இதில் இருந்து மக்கள் செய்திகளில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பது தெரிகிறது என்கிறார் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்.