அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
எம்.ஜி,ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகள். ஆனால் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நடிகர் பி.வி.நரசிம்மபாரதி என்பது பலருக்கும் தெரியாது.
பாரதிதாசன் எழுதிய எதிர்பாராத முத்தம் என்று குறுங்காவியத்தை மார்டன் தியேட்டர்ஸ் சினிமாவாக எடுக்க முன்வந்தது. அதனை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு சேலம் மார்டன் தியேட்டரில் நடந்தது. அந்த தேர்விற்கு எம்.ஜி.ஆர், சிவாஜியையும் சேர்த்து சுமார் 100 பேர் சென்றனர். அதில் பி.வி.நரசிம்மபாரதியும் ஒருவர். எல்லீஸ் டங்கன் ஒவ்வொருவரையாக நிற்க வைத்து நடிக்கச் சொல்லி பார்த்து கேள்வி கேட்டார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அவர் தேர்வில் வெற்றி பெறவில்லை.
பி.வி.நரசிம்மபாரதியிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவர் ஆங்கிலத்தில் "ஐ ஏம் லயன்" என்றார். "இது பெற்றவர்கள் வைத்த பெயரா நீங்களே சூட்டிக் கொண்ட பெயரா" என்றார். அதற்கு அவர் "அது உங்களுக்கு தேவையில்லாதது ஐ ஏம் லயன்" என்றார். பிறகு "ஏதாவது நடித்து காட்டுங்கள்" என்றார் டங்கன். "உங்கள் படத்தின் கேரக்டரை சொல்லுங்கள் அதை நடித்துக் காட்டுகிறேன்" என்றார் ஆங்கிலத்தில். பி.வி.நரசிம்மபாரதியின் தூய ஆங்கிலமும், அந்த திமிரும் டங்கனுக்கு பிடித்திருந்தது., படத்திற்கு அவரையே ஹீரோவாக தேர்வு செய்தார்.
அடுத்து அவர் நடிக்க பொன்முடி என்ற படத்தை இயக்கினார் டங்கன். அதில் நரசிம்மபாரதியும், மாதுரி தேவியும் நெருக்கமாக நடித்தனர். காதலர்கள் தொட்டு பேசி நடிக்க தயங்கிக் கொண்டிருந்த காலத்தில் பொன்முடி படத்தில் நரசிம்ம பாரதி மாதுரி தேவியுடன் கடற்கரை மணலில் கட்டிப்புரண்டார். அது பெரிய புரட்சியாக பேசப்பட்டது.
சிவாஜியின் இரண்டாவது படமான திரும்பிப்பார் படத்தில் சிவாஜி கொடூர வில்லனாக நடித்தார். அதில் பி.வி.நரசிம்மபாரதிதான் ஹீரோ. பி.வி.நரசிம்மபாரதி நடிக்கும் வரை நம்மால் முன்னுக்கு வரவே முடியாது என்றே சிவாஜியும், எம்.ஜி.ஆரும் நம்பினார்கள். 9 படத்தில் ஹீரோவாகவும், 15 படங்களில் குணசித்ர நடிகராகவும் நடித்த பி.வி.நரம்சிம்மபாரதி. ஏனோ தொடர்ந்து நடிக்கவில்லை. பி.வி.நரசிம்மபாரதி மதுரையில் பிறந்தவர். சவுராஷ்டிரா சமூகத்தில் பிறந்தவர். டி.எம்.சவுந்தர்ராஜனின் தூரத்து உறவினர். மிகவேகமாக வளர்ந்த பி.வி.நரசிம்ம பாரதியின் சினிமா வாழ்வு மிகவேகமாக தளர்ந்தும் போனது. அதற்கு காரணம் என்னவென்று யாருக்கும் தெரியாது.