ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி சரிகமபா சாம்பியன். கடந்த பல மாதங்களாக நடந்து வந்த இந்தப் பாடல் போட்டி நிகழ்ச்சியில் பல இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு பாடி வந்தார்கள். ஹிமேஷ் ரேஷ்மையா, ஜாவீத் அலி, நேகா கட்கர், ஆதித்யா நாராயண் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வந்தனர்.
இதன் இறுதி சுற்றுக்கு விஷ்வ பிரசாத், ரக்ஷத், நிகாரிகா, ஆன்பென்ஷன், திஷாதனா ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிப் போட்டிகள் கடந்த ஏப்ரல் 28ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் நடிகர்கள் ஜீவா, சூரி, திரைப்பட இசை அமைப்பாளர்கள், சந்தோஷ் நாராயணன், டி.இமான் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சியுடன் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நடந்தது.
போட்டியாளர்கள் 5 பேரில் 40 லட்சம் மதிப்புள்ள சொகுசு வீட்டை பரிசாக பெற்றது யார்? இரண்டாது பரிசான 3 லட்சத்தையும், மூன்றாவது பரிசான 2 லட்சத்தையும் பெற்றது யார் என்பது இன்று மாலை தெரிந்து விடும். இன்று (மே 7) மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை இறுதி போட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்.