மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ரெஜினாவுக்கும், சமந்தாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். தமிழ் படங்களில் அறிமுகமாகி இங்கு புறக்கணிக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று வெற்றி பெற்றவர்கள். சமந்தா மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றி பெற்றார். அவர் வழியில் மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார் ரெஜினா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள மாநகரம் படம் மூலம் கவனம் பெற்றுள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜதந்திரம் 2 என 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
"தமிழ் நாட்டில் பிறந்து விட்டு தமிழில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து. இதற்காக பல முயற்சிகள் செய்தேன். இடையிடையே சில தமிழ் படங்களில் நடிக்கவும் செய்தேன். ஆனால் மாநரகம் நல்ல ஒரு திருப்பத்தை கொடுத்துள்ளது. சரவணன் இருக்க பயமேன் அடுத்து வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது பெருமையாக உள்ளது. எளிமையான நடிகர், அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர் எது சொன்னாலும் பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
தமிழ் படங்களில் நான் எப்போதோ ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் கடவுள் அதற்கான நாளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார், இப்போது அதற்கான வாய்ப்புகளை தேடித் தருகிறான். தமிழில் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன்" என்கிறார் ரெஜினா.