வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரெஜினாவுக்கும், சமந்தாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். தமிழ் படங்களில் அறிமுகமாகி இங்கு புறக்கணிக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று வெற்றி பெற்றவர்கள். சமந்தா மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றி பெற்றார். அவர் வழியில் மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார் ரெஜினா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள மாநகரம் படம் மூலம் கவனம் பெற்றுள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜதந்திரம் 2 என 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
"தமிழ் நாட்டில் பிறந்து விட்டு தமிழில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து. இதற்காக பல முயற்சிகள் செய்தேன். இடையிடையே சில தமிழ் படங்களில் நடிக்கவும் செய்தேன். ஆனால் மாநரகம் நல்ல ஒரு திருப்பத்தை கொடுத்துள்ளது. சரவணன் இருக்க பயமேன் அடுத்து வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது பெருமையாக உள்ளது. எளிமையான நடிகர், அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர் எது சொன்னாலும் பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
தமிழ் படங்களில் நான் எப்போதோ ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் கடவுள் அதற்கான நாளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார், இப்போது அதற்கான வாய்ப்புகளை தேடித் தருகிறான். தமிழில் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன்" என்கிறார் ரெஜினா.