விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ரெஜினாவுக்கும், சமந்தாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். தமிழ் படங்களில் அறிமுகமாகி இங்கு புறக்கணிக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று வெற்றி பெற்றவர்கள். சமந்தா மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றி பெற்றார். அவர் வழியில் மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார் ரெஜினா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள மாநகரம் படம் மூலம் கவனம் பெற்றுள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜதந்திரம் 2 என 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
"தமிழ் நாட்டில் பிறந்து விட்டு தமிழில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து. இதற்காக பல முயற்சிகள் செய்தேன். இடையிடையே சில தமிழ் படங்களில் நடிக்கவும் செய்தேன். ஆனால் மாநரகம் நல்ல ஒரு திருப்பத்தை கொடுத்துள்ளது. சரவணன் இருக்க பயமேன் அடுத்து வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது பெருமையாக உள்ளது. எளிமையான நடிகர், அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர் எது சொன்னாலும் பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
தமிழ் படங்களில் நான் எப்போதோ ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் கடவுள் அதற்கான நாளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார், இப்போது அதற்கான வாய்ப்புகளை தேடித் தருகிறான். தமிழில் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன்" என்கிறார் ரெஜினா.