தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1970ம் ஆண்டு வெளிவந்த படம் மாட்டுக்கார வேலன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி நடித்திருந்தனர், கே.வி மகாதேவன் இசை அமைத்திருந்தார். ப.நீலகண்டன் இயக்கி இருந்தார். வாலி கண்ணதாசன் பாடல்களை எழுதிருந்தனர்.
மாடு வளர்க்கிற விவசாயி என்ற ஒரே காரணத்துக்காக தன் பெண்ணை தர மறுத்து இழிவாக பேசி அவமானப்படுத்தியவர் முன்னால் பெரிய அளவில் ஜெயித்துக்காட்டி அந்த பெண்ணை மணமுடிப்பதான கதை. மாடு வளர்க்கிற விவசாயியை பெருமை படுத்துகிற விதமாக உருவான படம். பெரும் வெற்றியை பெற்றது. 1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, படம் மாட்டுக்கார வேலன்.
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. கவியரசரின் வரிகளோடு அமைந்த “தொட்டுக்கொள்ளவா” பாடலும், “ஒரு பக்கம் பாக்குறா” பாடலும், "வாலிபக்கவிஞர்" வாலி வரிகளில் அமைந்த “பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா” ஆகிய இனிமையான காதல் சொட்டும் பாடலும் அமைந்த அற்புதத் திரைக்காவியம். “சத்தியம் நீயே தர்ம தாயே” பாடலும், “பட்டிக்காடா பட்டணமா” ஆகிய தத்துவப் பாடல்களும் இடம் பெற்றுள்ள திரைப்படம். ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான மாட்டுக்கார வேலன் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.