ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை, அபிபுல்லா சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்கு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி பூஜை எல்லாம் நடந்தது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஆக்கிரமிப்பு
இந்நிலையில் சென்னை, தி.நகரை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணமாலை ஆகியோர் நடிகர் சங்கம், 33 அடி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், தி.நகரில், அபிபுல்லா சாலையையும், பிரகாசம்சாலையையும் இணைக்கும் விதமாக, 33 அடி சாலை இருந்தது. தென்னிந்திய நடிகர் சங்கம், இந்த பகுதியில், 1956ம் ஆண்டில் நிலம் வாங்கியது. வருவாய் ஆவணங்களில், 33 அடி அகல சாலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம், 14 கிரவுண்ட் நிலம் தான் வாங்கியிருந்தது; தற்போது, சாலையையும் ஆக்கிரமித்து, 18 கிரவுண்ட்டுக்கு உரிமை கோருகிறது. 33 அடி சாலையையும் சேர்த்து, பட்டா பெற்று விட்டனர். மேலும் குடியிருப்பு பகுதியில் அடுக்கமாடி வளாகம், தியேட்டர் கட்ட முடியாது. விதிமுறையை மீறி கட்டடம் கட்ட அனுமதி பெற்றுள்ளனர். எனவே, 33 அடி அகலமான சாலையில், கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கட்டடம் கட்ட இடைக்கால தடை
இந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும், நோட்டீஸ் அனுப்ப, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. அதன்படி நடிகர் சங்கம் இன்று தங்களது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டடம் கட்டப்பட இருக்கிறது. எந்த ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்றும் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், சங்க கட்டடம் கட்ட தற்காலிக தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையம் ஒன்றை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டதோடு, வழக்கையும் அடுத்தமாதம் ஜூன் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.